கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 3,129 பேர் பலி- மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்


கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 3,129 பேர் பலி-  மத்திய அமைச்சர்  ஹர்ஷவர்தன் தகவல்
x
தினத்தந்தி 28 Jun 2021 9:53 PM GMT (Updated: 28 Jun 2021 9:53 PM GMT)

கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 3,129 பேர் பலியானதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா விவகாரம் தொடர்பான மந்திரிகள் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நாட்டில் இதுவரை மொத்தம் 40 ஆயிரத்து 845 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டதாக பதிவாகி உள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 129 பேர் பலியாகி உள்ளனர். மக்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையில், அமெரிக்காவை முந்தி இந்தியா சாதனை படைத்துள்ளது” என்றார்.


Next Story