இந்திய பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல் - பிரதமர் மோடி டுவீட்
2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஜிஎஸ்டி அறிமுகமாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல். ஜிஎஸ்டி வெளிப்படைத்தன்மையை கணிசமாக அதிகரிக்கும்; அதே வேளையில் சாதாரண மனிதர்கள் மீதான வரி சுமையை குறைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
GST has been a milestone in the economic landscape of India. It has decreased the number of taxes, compliance burden & overall tax burden on common man while significantly increasing transparency, compliance and overall collection. #4YearsofGST
— Narendra Modi (@narendramodi) June 30, 2021
Related Tags :
Next Story