கேரளாவில் புதிதாக 12,100 பேருக்கு கொரோனா பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 July 2021 3:02 PM GMT (Updated: 4 July 2021 3:02 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 12,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 76 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,716 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 11,551 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 28,55,460 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,04,039 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Next Story