புதுச்சேரியில் 11 குழந்தைகள் உள்பட 94 பேருக்கு கொரோனா பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 July 2021 8:37 AM GMT (Updated: 17 July 2021 8:37 AM GMT)

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 70 பேரும், காரைக்காலில் 19 பேரும், மாஹேவில் 2 பேரும், ஏனாமில் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,19,603 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் புதுச்சேரியில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,776 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 171 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,657 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 1,170 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதுவையில் சனிக்கிழமை நிலவரப்படி 15 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர். அதில் 11 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 5 வயதுக்கு கீழ் 8 பேருக்கும், 5 வயதிற்கு மேல் 3 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் தாயார் 3 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story