ராஜினாமா செய்யும்படி யாரும் நெருக்கடி தரவில்லை; எடியூரப்பா பேட்டி
கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து இன்று எடியூரப்பா ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநரிடம் அளித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா கூறியதாவது:- “ராஜினாமா செய்யுமாறு எனக்கு யாரும் நெருக்கடி தரவில்லை. ஏற்கனவே உறுதி அளித்த படி 2 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்து விட்டு ராஜினாமா செய்துள்ளேன்.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க பாடுபடுவேன். எனக்கு பிறகு முதல்வராக பதவியேற்பவர் யார் என்ற விவரம் எனக்கு கொடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story