உத்தர பிரதேசத்தில் பயங்கர விபத்து: சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் பலி
உத்தர பிரதேசத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த பேருந்து மீது டிரக் மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பாக சாலையில் தூங்கிக் கொண்டு இருந்த தொழிலாளர்கள் பலியாகினர்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் பரபன்கி மாவட்டத்தில் டிரக்- பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் 18-பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து குறித்து உத்தர பிரதேச போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்தர பிரதேசத்தின் லக்னோ- அயோத்யா தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நேரிட்டுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பஸ் ஒன்றில் வருகை தந்துள்ளனர். அவர்கள் பயணித்த பேருந்தில் பழுது ஏற்பட்டதால், பேருந்து சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டது.
நள்ளிரவு என்பதால் பேருந்தின் முன்பக்கத்தில் அதாவது சாலையில், தொழிலாளர்கள் பலர் படுத்து உறங்கியுள்ளனர். அதிகாலை 1.30 மணியளவில் பேருந்தின் பின்புறம், அசூர வேகத்தில் வந்த டிரக் ஒன்று மோதியுள்ளது.
இந்த பயங்கர விபத்தில் பேருந்தின் முன்பக்கத்தில் உறங்கி கொண்டு இருந்த தொழிலாளர்கள்18 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story