ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,546-பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,546- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட்டுள்ளது.
அமராவதி,
ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,546- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,940-பேர் குணம் அடைந்துள்ளனர் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 20,170- ஆக உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 37 ஆயிரத்து 956- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13,428- ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story