ஒலிம்பிக்கில் வெண்பல பதக்கம் இந்திய ஆக்கியின் பொற்காலத்தின் தொடக்கம்: அஜித்பவார்


ஒலிம்பிக்கில் வெண்பல பதக்கம் இந்திய ஆக்கியின் பொற்காலத்தின் தொடக்கம்: அஜித்பவார்
x
தினத்தந்தி 5 Aug 2021 4:45 PM GMT (Updated: 5 Aug 2021 4:45 PM GMT)

ஒலிம்பிக்கில் பெற்ற வெண்கல பதக்கம் இந்திய ஆக்கியின் பொற்காலத்தின் தொடக்கமாக இருக்கும் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் பதக்கம்

ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் காலை வெண்கலப்பதக்கத்திற்கான ஆண்கள் ஆக்கி போட்டி நடந்தது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி, ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.இந்திய ஆக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்று வரலாறு படைத்து உள்ளது. ஆக்கியின் அணியின் வெற்றியை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டி வாழ்த்து கூறி வருகின்றனர்.

பொற்காலத்தின் தொடக்கம்

இதில் துணை முதல்-மந்திரியும், மாநில ஒலிம்பிக் சங்க சேர்மனுமான அஜித்பவாரும் இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்துகளை கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், "கடின உழைப்பு மற்றும் காத்திருப்புக்கு பிறகு 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வெற்றி கிடைத்து உள்ளது. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நாட்டின் கவுரவம் நிலைநாட்டப்பட்டு உள்ளது. இந்த வெண்கல பதக்கம் இந்திய ஆக்கியின் பொற்காலத்தின் தொடக்கமாக இருக்கும்" என்றார்.

இதேபோல அவா் இந்திய ஆக்கி அணிக்கு டுவிட்டரிலும் வாழ்த்து கூறியுள்ளார்.


Next Story