ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட சி-17 ரக விமானம் இந்தியா வந்தடைந்தது


ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட சி-17 ரக விமானம் இந்தியா வந்தடைந்தது
x
தினத்தந்தி 17 Aug 2021 6:20 AM GMT (Updated: 17 Aug 2021 6:20 AM GMT)

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோருடன் புறப்பட்ட சி-17 ரக விமானம் இந்தியா வந்தடைந்தது.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் போய்விட்டது' என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. 

அந்த வகையில், இந்தியாவும் அங்குள்ள நமது நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நேற்று முன் தினம் 129-பேருடன் ஒரு விமானம் இந்தியா வந்தது. நேற்று காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட களேபரத்தால் விமான நிலையம் மூடப்பட்டது. இதனால்,  விமானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையில், இன்று அதிகாலை காபூல் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து, 120 இந்திய அதிகாரிகளுடன் காபூலில் இருந்து இந்தியாவுக்கு 2-வது  விமானம் (சி 17 ) புறப்பட்டது. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோருடன் புறப்பட்ட சி-17 ரக விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 11.40 மணியளவில் தரையிறங்கியது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் இரண்டாவது கட்டமாக இந்திய அதிகாரிகள் நாடு திரும்பியுள்ளனர்.

Next Story