ரெயில்களில் புதிய 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டி; குறைவான கட்டணத்தில் அறிமுகம்


ரெயில்களில் புதிய 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டி; குறைவான கட்டணத்தில் அறிமுகம்
x
தினத்தந்தி 29 Aug 2021 5:24 AM GMT (Updated: 29 Aug 2021 5:24 AM GMT)

ரெயில்களில் புதிய 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டி வசதி வருகிறது.

புதுடெல்லி,

ரெயில்களில் புதிதாக 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டி வசதி வருகிறது. இந்த பெட்டிகளில் பயணிப்பதற்கு தற்போது வழக்கத்தில் உள்ள 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் வசூலிக்கப்படுகிற கட்டணத்தைவிட 8 சதவீதம் குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு குறைவான கட்டணத்தில் சிறப்பான பயண அனுபவத்தை தருவதற்காக இந்த மலிவு கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த 3 அடுக்கு ஏ.சி. சொகுசு வகுப்பு பெட்டிகளில் 83 படுக்கை வசதிகள் இருக்கும். 3 பக்கவாட்டு படுக்கைகள் இருக்கும்.

806 புதிய ஏ.சி. 3 அடுக்கு சொகுசு வகுப்பு பெட்டிகள் இந்த நிதி ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ரெயில்வே தரப்பில் கூறப்படுகிறது.

Next Story