அரியானாவில் கனமழை; சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி
அரியானாவில் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.
குருகிராம்,
வட இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
அந்தவகையில், அரியானா மாநிலம் குருகிராமின் பல பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழை கொட்டித் தீர்த்தது.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர். சாலைகளில் தேங்கிய வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும் குருகிராமில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நகரத்தில் 64.2 மிமீ மழை பெய்துள்ளது.
Related Tags :
Next Story