கொரோனா பாதிப்பு: டெல்லியில் இன்று உயிரிழப்பு இல்லை


கொரோனா பாதிப்பு: டெல்லியில் இன்று உயிரிழப்பு இல்லை
x
தினத்தந்தி 4 Sep 2021 5:54 PM GMT (Updated: 4 Sep 2021 5:54 PM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில  வாரங்களாகவே டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு இரட்டை இலக்க எண்களிலேயே பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 55 ஆக பதிவாகியுள்ளது. 

எனினும், இது கடந்த 15 நாட்களில் சற்று அதிகபட்ச எண்ணிக்கையாகும். தொற்று பாதிப்பு லேசாக உயர்ந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும்,  ஆறுதல் அளிக்கும் விதமாக தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து 4-வது நாளாக உயிரிழப்பு எதுவும் ஏற்படாதது மக்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்துள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது.  

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  14,37,929- ஆகவும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14.12 லட்சமாகவும் உள்ளது. கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,082- ஆக நீடிக்கிறது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 354- ஆக உள்ளது. 


Next Story