அரியானாவில் விவசாயிகள் இன்று முற்றுகைப் போராட்டம்
அரியானாவில் இன்று முற்றுகை போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
சண்டிகார்,
அரியானா தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 28-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் நடத்திய தடியடிக்கு எதிா்ப்பு தெரிவித்து கா்னாலில் உள்ள சிறிய தலைமைச் செயலகத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) முற்றுகையிடும் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ள அரியாணா போலீஸாா், செல்போன் இணைய சேவையை துண்டித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை இணைய சேவை துண்டிப்பு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story