வருகிற 14-ந்தேதி பிரதமர் மோடி உத்தரபிரதேசம் செல்கிறார்
பிரதமர் மோடி வருகிற 14-ந்தேதி உத்தரபிரதேசம் செல்கிறார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜனதா மேலிடத் தலைவர்கள் தேர்தல் பிரசார பணிகளை தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திரமோடி வருகிற 14-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் செல்ல உள்ளார். அங்கு அலிகாரில் உள்ள ராஜா மகேந்திரசிங் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதை தொடர்ந்து அரசியல் நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. மேலும் தேர்தல் பணிகளின் ஒரு அங்கமாக அவர் அலிகாரில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
Related Tags :
Next Story