பஞ்சாபில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று
பஞ்சாபில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சண்டிகார்,
பஞ்சாபில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,00,877 - ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,447- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 320- ஆக உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 31 பேர் பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,84,110- ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story