டெல்லியில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தின் ஒரு பகுதியிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் இன்று காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல இடங்களிலும் மழைநீா் சூழ்ந்தது. குறிப்பாக சாலைகளில் குளம் போல் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டெல்லியில் மோதி பாக், ஆர்கே புரம், மது விகார், ஹரி நகர், ரோஹ்தக் சாலை, பதர்பூர், சோம் விகார், ரிங் ரோடு, விகாஸ் மார்க், சங்கம் விகார் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தின் ஒரு பகுதியிலும் மழை நீர் தேங்கியுள்ளது. டெல்லியில் பிற்பகல் வேளையில் இடியுடன் மிதமானதுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Related Tags :
Next Story