மேற்கு வங்காளத்தில் கூடுதலாக 70 குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு
மேற்கு வங்காளத்தில் கூடுதலாக 70 குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சிலிகுரி,
மேற்கு வங்காளத்தில் சிலிகுரி மாவட்டத்தில் 70 குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 150 குழந்தைகளுக்கு இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டு ஜல்பைகுரி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி மருத்துவர் சுபீர் பவுமிக் கூறும்போது, பெருமளவிலான குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் காணப்படுகின்றன. வைரசின் பாதிப்புகளால் இவை ஏற்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.
சிலிகுரி மாவட்ட மருத்துவமனையில் நிலைமை மோசமடைந்து உள்ளது. நாள்தோறும் நோயாளிகளின் எண்ணிக்கையானது 200 முதல் 300 ஆக உயர்ந்து உள்ளது. அவற்றில் 31 பேர் தினமும் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story