இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 80.85 கோடி


இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 80.85 கோடி
x
தினத்தந்தி 20 Sep 2021 5:24 AM GMT (Updated: 20 Sep 2021 5:24 AM GMT)

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 81 கோடியை நெருங்கியுள்ளது.




புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து காத்து கொள்வதற்காக நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80.85 கோடியாக உள்ளது என தெரிவித்து உள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 0.95 சதவீதம் என்ற அளவில் உள்ளது.  இது கடந்த 2020ம் ஆண்டு மார்ச்சில் பதிவான எண்ணிக்கையை விட குறைவாகும்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.  மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,478,419 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 43,938 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,27,15,105 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது கடந்த 183 நாட்களில் மிக குறைவாகும்.  நாட்டில் இதுவரை 55.36 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.


Next Story