கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,470- பேருக்கு கொரோனா


கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,470- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Oct 2021 2:18 PM GMT (Updated: 9 Oct 2021 2:18 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,470- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,470- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 4 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 

கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- “ கேரளாவில் கொரோனா பாதிப்பால் மேலும் 101- பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்து 84 ஆயிரத்து 109- ஆக உயர்ந்துள்ளது.  

மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 132 ஆக உள்ளது.  தொற்று பாதிப்பு விகிதம் 10.4 சதவிகிதம் ஆக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 88,310 - மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன

Next Story