அந்தமானில் கடந்த 24 மணி நேரத்தில் 3-பேருக்கு கொரோனா தொற்று


அந்தமானில் கடந்த 24 மணி நேரத்தில் 3-பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 10 Oct 2021 9:22 AM GMT (Updated: 10 Oct 2021 9:22 AM GMT)

அந்தமானில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போர்ட் பிளேர், 

அந்தமானில் கடந்த 24 மணி நேரத்தில் 3- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தமானில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,632- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்த 3 பேரில் ஒருவர் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 2 பேர் குணம் அடைந்ததன் மூலம் இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7,492- ஆக உயர்ந்துள்ளது. அந்தமானில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. வடக்கு  மற்றும் மத்திய அந்தமான் நிகோபார் தீவுகளில் தொற்று பாதிப்பு இல்லாத பகுதியாக உள்ளது. 

கடந்த 24 மணி தொற்று பாதிப்பால்  உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 129- ஆக நீடிக்கிறது. அந்தமானில் கொரோனா மொத்த பாதிப்பு விகிதம்1.34 சதவிகிதமாக உள்ளது. அந்தமானில் இதுவரை 4.56 பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 


Next Story