லகிம்பூர் வன்முறை: மத்திய மந்திரியின் மகனுக்கு 3 நாள் போலீஸ் காவல்


லகிம்பூர் வன்முறை: மத்திய மந்திரியின் மகனுக்கு 3 நாள் போலீஸ் காவல்
x
தினத்தந்தி 11 Oct 2021 4:20 PM GMT (Updated: 11 Oct 2021 4:20 PM GMT)

அஷிஸ் மிஸ்ராவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

லக்னோ, 

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 

விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரான ஆஷிஷ் மிஸ்ரா 12 மணி நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். 

இந்த நிலையில், ஆஷிஸ் மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனைகளுடன் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது.

Next Story