காஷ்மீரின் ஸ்ரீநகரில் என்கவுண்ட்டர் தொடங்கியது


காஷ்மீரின் ஸ்ரீநகரில் என்கவுண்ட்டர் தொடங்கியது
x
தினத்தந்தி 21 Oct 2021 3:28 PM GMT (Updated: 21 Oct 2021 3:28 PM GMT)

காஷ்மீரின் ஸ்ரீநகரில் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.



ஸ்ரீநகர்,

காஷ்மீரில் சமீப காலங்களாக பொதுமக்கள் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன.  பயங்கரவாதிகளால் நடத்தப்படும் இந்த தாக்குதல்களில் பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.  இதனை முன்னிட்டு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் சன்னபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.  இந்த நிலையில், படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.


Next Story