100 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டதாக பிரதமர் மோடி கூறினார் - ஓவைசி


100 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டதாக பிரதமர் மோடி கூறினார் - ஓவைசி
x
தினத்தந்தி 23 Oct 2021 10:04 PM GMT (Updated: 23 Oct 2021 10:34 PM GMT)

இந்தியாவில் 100 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்று ஓவைசி கூறியுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள கித்தோர் என்ற பகுதியில் அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சியின் கூட்டம் நடைபெற்றது.  

இதில், எஐஎம்ஐஎம் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி பங்கேற்றார். 

அப்போது அவர் பேசியதாவது, 100 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியாவில் இதுவரை 31% மக்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளனர். 

உத்தரபிரதேசத்தில் தலீத் மக்களை தொடர்ந்து இஸ்லாமியர்கள் மிகப்பெரிய அநீதியை சந்திக்கின்றனர். முன்பு போலவே பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வந்து உங்களிடம் வாக்குகள் கேட்பார்கள், அவர்கள் உங்கள் அனுதாபிகளாக மாறுவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்றார்.

Next Story