தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவராக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மீண்டும் தேர்வு


தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவராக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மீண்டும் தேர்வு
x
தினத்தந்தி 25 Oct 2021 5:58 PM GMT (Updated: 25 Oct 2021 5:58 PM GMT)

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவராக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐதராபாத், 

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக 10-வது முறையாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில் வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்தும், மாநிலம் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

Next Story