முன்னாள் முதல்-மந்திரி குறித்து அவதூறு பேச்சு: எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போராட்டம்


முன்னாள் முதல்-மந்திரி குறித்து அவதூறு பேச்சு: எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போராட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2021 9:50 AM GMT (Updated: 3 Nov 2021 9:50 AM GMT)

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா குறித்து அவதூறாக பேசிய சிக்கமகளூர் தொகுதி எம்எல்ஏ சி டி ரவிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

சிக்கமகளூரு :

முன்னாள் முதல்- மந்திரி  சித்தராமையா முஸ்லீம் அமைப்பின் நிகழ்ச்சியில் ஒன்றில் தொப்பி அணிந்து  கலந்து கொண்டார்.  இதனை  கம்பளி போர்த்தும் மதத்தைச் சேர்ந்தவர் தொப்பி அணிந்துள்ளார். அவர் எந்த மதத்தில் பிறந்தார் எனக் கூறி சிக்கமகளுரு தொகுதி எம்.எல்.ஏ. சிடி ரவி கேலி செய்து  டுவிட்டரில் பதிவிட்டார்.

இதற்கு கடும் கண்டனம் தெறிவித்து  சிக்கமகளுரில் இன்று குருபா சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குருபா சமுதாயத்தினரை அவமானப்படுத்தும் வகையில் எம்.எல்.ஏ. சி டி ரவி அவதூறாக பேசி இருக்கிறார் இதற்கு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். பொது மன்னிப்பு கேட்காவிட்டால் எங்களுடைய போராட்டம்  தொடரும் என அவர்கள் கூறினர்.

Next Story