16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 6 மாதங்களில் 400 பேர் பாலியல் வன்முறை
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் 16 வயது சிறுமி 6 மாதங்களில் 400 பேர் பாலியல் வன்முறை செய்து உள்ளனர்.
மும்பை
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் திருமணம் செய்த 6 மாதங்களில் போலீசார் உள்பட 400 க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து உள்ளனர். அவர் புகார் அளிக்க முயன்றபோது ஒரு போலீஸ்காரரால் பாலியல் பலாதகாரம் செய்யப்பட்டார். தற்போது அந்த சிறுமி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
மாவட்ட போலீஸ் சூப்புரெண்டு ராஜா ராமசாமி கூறியதாவது:-
பீட் மாவட்டத்தில் திருமணமான சிறுமி ஒருவர் கடந்த 6 மாதங்களில் 400 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் புகார் தொடர்பாக குழந்தை திருமணத் தடைச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.
Related Tags :
Next Story