கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,405- பேருக்கு கொரோனா


கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,405- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Dec 2021 1:43 PM GMT (Updated: 1 Dec 2021 1:43 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,405- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5, 405- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,535- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 51,35,390 - ஆக அதிகரித்துள்ளது.  

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 4,538- பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 50,61,906- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 44,124- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 64,191- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  

கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில்  திருவனந்தபுரத்தில் அதிகபட்சமாக 988- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 822- பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

Next Story