கடவுள் கிருஷ்ணர் என் கனவில் தோன்றி நமது கட்சிதான் ஆட்சியமைக்கும் என்றார் - அகிலேஷ்
கடவுள் கிருஷ்ணர் தினமும் என் கனவில் தோன்றி நமது கட்சிதான் ஆட்சியமைக்கும் என்று கூறுகிறார் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு வரும் மார்ச் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் நமது கட்சி தான் ஆட்சியமைக்கும் என கடவுள் கிருஷ்ணர் தன்னிடம் கூறியதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ், கடவுள் கிருஷ்ணர் தினமும் என் கனவில் தோன்றி நமது கட்சி தான் ஆட்சியமைப்புக்கும் என்று கூறுகிறார்’ என்றார்.
Related Tags :
Next Story