கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இந்தியா... டெல்லி மருத்துவர் பேட்டி


கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இந்தியா... டெல்லி மருத்துவர் பேட்டி
x
தினத்தந்தி 4 Jan 2022 6:19 PM GMT (Updated: 4 Jan 2022 6:19 PM GMT)

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இந்தியா உள்ளது என டெல்லியை சேர்ந்த மருத்துவர் பேட்டியில் தெரிவித்து உள்ளார்.


புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது.  இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இவற்றில் டெல்லி, மராட்டியம் அதிக அளவிலான ஒமைக்ரான் பாதிப்புகளை கொண்டுள்ளன.  இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த மருத்துவர் எஸ். சந்திரா செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் 3வது அலையின் தொடக்கத்தில் நாடு உள்ளது என காட்டுகிறது.

இந்த காலகட்டத்தில், ஒமைக்ரான் வகை கொரோனா ஆதிக்கம் செலுத்தும்.  டெல்டா வகை கொரோனாவை விட இதன் அறிகுறிகளின் கடுமை மிக குறைவாகவே உள்ளது.  அதனால் பாதிப்பு அதிகளவில் இருக்க வேண்டியதில்லை.  2வது அலையுடன் ஒப்பிடும்போது, குறைவான அளவிலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.


Next Story