திருப்பதி ஏழுமலையான் கோவில்: ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் 45 நிமிடங்களில் விற்று தீர்ந்தன


திருப்பதி ஏழுமலையான் கோவில்: ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் 45 நிமிடங்களில் விற்று தீர்ந்தன
x
தினத்தந்தி 28 Jan 2022 7:05 PM GMT (Updated: 28 Jan 2022 7:05 PM GMT)

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட்ட 3¼ லட்சம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் 45 நிமிடங்களில் விற்று தீர்ந்தன.

திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு 12 ஆயிரம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வீதம் 28 நாட்களுக்கு மொத்தம் 3 லட்சத்து 36 ஆயிரம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ெவளியிடப்பட்டன. 

வெளியிட்ட 45 நிமிடங்களில் 3 லட்சத்து 36 ஆயிரம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story