பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச்சூடு: வீரர் காயம்
பஞ்சாபின் வடலா பகுதியில் ஊடுருவிய மர்மநபர்களை விரட்டிய போது இரு தரப்பினருக்கும் நடைபெற்ற சண்டையில் நமது வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.
குர்தாஸ்பூர்,
பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டம் வடலா பகுதியிலிருக்கும் பாகிஸ்தான் எல்லையில், எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர்.
பாக்.,கில் இருந்து ஊடுருவிய மர்ம நபர்களை நமது வீரர்கள் எச்சரித்தனர்.அதை மீறி அவர்கள் ஊடுருவ, இரு தரப்பினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் காயமடைந்த பி.எஸ்.எப்., வீரர் கியான் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அப்பகுதியில் வீரர்கள் நடத்திய சோதனையில், 58 கிலோ ஹெராயின் மற்றும் துப்பாக்கிகளை கைப்பற்றினர். பாக்., தரப்பிலான போதைப் பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பி.எஸ்.எப்., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story