ஜார்கண்டில் பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்


ஜார்கண்டில் பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 18 Sep 2022 1:46 AM GMT (Updated: 18 Sep 2022 1:54 AM GMT)

ஜார்கண்ட்டில் பஸ் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் இன்று சுமார் 50 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

கிரிதி மாவட்டத்தில் இருந்து ராஞ்சி நோக்கிச் சென்ற பேருந்து, தடிஜாரியா காவல் நிலையப் பகுதியில் உள்ள சிவன்னே ஆற்றில் உள்ள பாலத்தின் தடுப்பு பகுதியை உடைத்துக் கொண்டு கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் ஹசாரிபாக்கில் உள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட்டில் பஸ் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில், என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். " என்று தெரிவித்துள்ளார்.


Next Story