போக்சோ வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது


போக்சோ வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
x

போக்சோ வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் இந்தியா-நேபாள எல்லையில் வைத்து கைது செய்தனர்.

மங்களூரு:-

உடுப்பியை சேர்ந்தவர் ஜித்தேந்திரா ஷர்கி (வயது 26). இவர் மீது கடந்த 2021-ம் ஆண்டு மணிப்பால் போலீசில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் மணிப்பால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அவருக்கு எதிராக உடுப்பி கோர்ட்டு 16 முறை வாரண்டு பிறப்பித்தது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. மேலும் அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், ஜித்தேந்திரா இந்திய-நேபாள எல்லையில் இருப்பதாக மணிப்பால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், நேபாள எல்லைக்கு சென்று ஜித்தேந்திராவை கைது செய்தனர். அவரை அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் உடுப்பிக்கு அழைத்து வந்தனர்.


Next Story