நஷ்ட ஈடு விவகாரம்: இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் புகாரை தள்ளுபடி செய்தது சர்வதேச கிரிக்கெட் வாரியம்


நஷ்ட ஈடு விவகாரம்: இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் புகாரை தள்ளுபடி செய்தது சர்வதேச கிரிக்கெட் வாரியம்
x
தினத்தந்தி 20 Nov 2018 10:46 AM GMT (Updated: 20 Nov 2018 10:46 AM GMT)

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நஷ்ட ஈடு கோரிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புகாரை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

துபாய்,
 
2008-ம் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மட்டும் இணைந்து முழு தொடரில் விளையாடவில்லை. இருந்தாலும் மற்ற சர்வதேச தொடர்களில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளும் 24 போட்டிகளில் விளையாட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்தப் போட்டிகள் நடத்தப்படாததால் பாகிஸ்தான் அணிக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் மீறிவிட்டதாகவும் இதன் காரணமாக 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 500 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிலும் புகார் செய்தது. இதுதொடர்பாக பேசி முடிவெடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (Dispute Resolutions Committee) தகராறுகள் தீர்ப்பாயம் முடிவு செய்தது. அதன்படி விசாரணையையும் தொடங்கியது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட அரசு அனுமதிக்காத வரை இந்த கிரிக்கெட் தொடர்பான ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்த முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியது.  

விசாரணையை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நஷ்ட ஈடு கோரிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புகாரை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது. இருப்பினும் இவ்விவகாரம் தொடர்பாக மேற்கொண்ட தகவல்களை தெரிவிக்க ஐசிசியை விரும்பவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story