முதல் காலாண்டில் என்.பீ.சி.சி. லாபம் ரூ.51 கோடி


முதல் காலாண்டில் என்.பீ.சி.சி. லாபம் ரூ.51 கோடி
x
தினத்தந்தி 20 Aug 2019 7:50 AM GMT (Updated: 20 Aug 2019 7:50 AM GMT)

என்.பீ.சி.சி. நிறுவனம், முதல் காலாண்டில் (2019 ஏப்ரல்-ஜூன்) ரூ.51 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.83 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 39 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் 7 சதவீதம் உயர்ந்து (ரூ.119 கோடியில் இருந்து) ரூ.127 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வருவாய் 16 சதவீதம் குறைந்து ரூ.1,942 கோடியாக குறைந்து இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது என்.பீ.சி.சி. நிறுவனப் பங்கு ரூ.35.80-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.33.15-ல் நிலைகொண்டது.

Next Story