வீணாக கடலுக்கு செல்லும் 1.73 லட்சம் கன அடி தண்ணீர்


வீணாக கடலுக்கு செல்லும் 1.73 லட்சம் கன அடி தண்ணீர்
x

வீணாக 1.73 லட்சம் கன அடி தண்ணீர் கடலுக்கு செல்கிறது.

அரியலூர்

மீன்சுருட்டி:

பாசன வசதி

அரியலூர்-தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் பகுதியில் மீன்சுருட்டி அருகே கீழணை உள்ளது. இந்த அணையின் ெமாத்த கொள்ளளவு 9 அடியாகும். இந்த அணையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் தென்னவநல்லூர், வேப்பக்குடி, கொல்லாபுரம், பிள்ளையாபாளையம், வீரசோழபுரம் ஆகிய கிராம பகுதிகளில் உள்ள விளை நிலங்களும், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களும் பாசனம் பெறுகின்றன. கல்லணையை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீர் இந்த கீழணையில் தேக்கப்படுகிறது.

இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால் ஆகியவற்றின் வழியாக செல்வதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வடவாறு வழியாக பெறப்படும் தண்ணீர் வீராணம் ஏரியில் தேக்கப்பட்டு, அங்கிருந்து சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, சென்னைக்கும் குடிநீர் தேவைக்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

வீணாக கடலுக்கு செல்கிறது

இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் கீழணைக்கு கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 74 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதில் வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது பாசனத்திற்கு தண்ணீர் தேவைப்படாததால் பொதுப்பணித்துறையினர் உபரிநீரை கொள்ளிடம் ஆற்றின் வழியாக திறந்து விட்டுள்ளனர். இதனால் கீழணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 73 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக சென்று மயிலாடுதுைை மாவட்டத்தில் மேேந்திரபள்ளி அருகே கடலில் வீணாக கலக்கும் நிலை உள்ளது.

கோரிக்கை

இந்த கீழணைக்கு கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீரை, திருமானூர் அருகே வாய்க்கால் அமைத்து பொன்னேரிக்கு கொண்டு சென்று சேமித்தால், கூடுதலாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வாய்க்கால் அமைக்கப்படாத நிலையில் கீழணைக்கு வரும் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று கலப்பது வேதனை அளிப்பதாக உள்ளது, என்று விவசாயிகள் கூறுகின்றனர்.


Next Story