மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

நெல்லையில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் மற்றும் பெருமாள்புரம் பகுதிகளில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது புதிய பஸ்நிலையம் எதிரே சந்திப்பு கணேசபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 33) என்பவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரிக்க சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலகிருஷ்ணனை கைது செய்து, 21 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுதவிர நெல்லை டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செபஸ்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது டவுன் பாறையடி அருகில் அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சவுந்தர் என்ற செந்தூர் பாண்டி (37) என்பவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மது பாட்டில்கள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story