தமிழுக்கு தொண்டாற்றியவர்களுக்கு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள், தமிழ்ச் செம்மல் விருதுகள்


தமிழுக்கு தொண்டாற்றியவர்களுக்கு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள், தமிழ்ச் செம்மல் விருதுகள்
x
தினத்தந்தி 24 April 2017 9:01 PM GMT (Updated: 24 April 2017 9:00 PM GMT)

தமிழுக்கு தொண்டாற்றியவர்களுக்கு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் மற்றும் தமிழ்ச் செம்மல் விருதுகள் பெறுவோர் பெயர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்கள் பெயர்களாலும் தன்னலமற்ற தலைவர்கள் பெயர்களாலும் விருதுகள் ஏற்படுத்தப்பட்டு, அந்தந்த விருதுகளுக்கான சான்றோர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2011–ம் ஆண்டுக்கு முன்பு தமிழ் வளர்ச்சிக்கான விருதுகள் 5 மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவரும் சான்றோர்களுக்கு, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவினால் புதிதாக 55 விருதுகள் அறிவிக்கப்பட்டன.

விருதாளர்கள் தேர்வு

2016–ம் ஆண்டிற்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள், 2015–ம் ஆண்டிற்கானத் தமிழ்ச் செம்மல் விருது ஆகிய விருதுகளுக்கான விருதாளர்கள், அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2016–ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது, சிறந்த தமிழ் அமைப்பான மாணவர் மன்றத்திற்கும்; கபிலர் விருது இல.க. அக்னிபுத்திரனுக்கும்; உ.வே.சா விருது, ம.அ. வேங்கடகிருஷ்ணனுக்கும்; கம்பர் விருது, இலங்கை ஜெயராஜ்க்கும்;

உமறுப்புலவர் விருது

சொல்லின் செல்வர் விருது, பி.மணிகண்டனுக்கும்; ஜி.யு.போப் விருது, வைதேகி ஹெர்பர்ட்டுக்கும்; உமறுப்புலவர் விருது, தி.மு. அப்துல் காதருக்கும்; இளங்கோவடிகள் விருது, நா.நஞ்சுண்டனுக்கும்; அம்மா இலக்கிய விருது, ஹம்சா தனகோபாலுக்கும்; மொழிபெயர்ப்பாளர் விருது, நாகலட்சுமி சண்முகம், அ.ஜாகிர் உசேன், அல்லா பிச்சை (எ) முகம்மது பரிஸ்டா, உமா பாலு, கா.செல்லப்பன், வி. சைதன்யா, சி.முருகேசன், கு.பாலசுப்பிரமணியன், ச.ஆறுமுகம்பிள்ளை, கே.எஸ். சுப்பிரமணியன் ஆகியோருக்கும்; 2015–ம் ஆண்டுக்கான முதல்–அமைச்சர் கணினித் தமிழ் விருது, செ.முரளி (எ) செல்வ முரளிக்கும் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.

தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்பிற்கு விருதுத்தொகையாக 5 லட்சம் ரூபாயும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

தமிழ்ச் செம்மல் விருது

2015–ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒருவர் என்ற வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை– வேம்பத்தூர் என்ற கிருட்டிணன்; திருவள்ளூர்– மா.கி.ரமணன்; காஞ்சீபுரம் – கூ.மு. துரை (எ) கவிஞர் கூரம் துரை; வேலூர் – வி. பத்மநாபன் (எ) வே.பதுமனார்; கிருஷ்ணகிரி – ந.நாகராசன்;

திருவண்ணாமலை – பா.இந்திரராசன்; விழுப்புரம் – கவிஞர் பெ.ஆராவமுதன்; கடலூர் – அரங்க. பாரி; பெரம்பலூர் – செ.சுந்தரம் (எ) வெண்பாவூர் செ.சுந்தரம்; அரியலூர் – ம.சோ.விக்டர்; சேலம் – பி.வேலுசாமி; தர்மபுரி – தகடூர். வனப்பிரியனார் (எ) கா.ராமசந்திரன்;

திருநெல்வேலி மாவட்டம்

நாமக்கல் – மா.சின்னு; ஈரோடு– ச.சந்திரகுமாரி; கரூர்– ச.வரதசிகாமணி; கோயம்புத்தூர் – சிந்தனைக் கவிஞர் கவிதாசன்; திருப்பூர் – ஆ. முருகநாதன்; நீலகிரி – மணி அர்ச்சுனன்; திருச்சிராப்பள்ளி தி.வெ.ராசேந்திரன்; புதுக்கோட்டை – ஞானாலயா பா. கிருட்டிணமூர்த்தி; சிவகங்கை– தி.அனந்தராமன்;

தஞ்சாவூர்– தங்கராசு; திருவாரூர்– வீ.ராமமூர்த்தி; நாகப்பட்டினம் – செ. செய்யது முகம்மது கலிபா சாகிப்; ராமநாதபுரம் – ஜெகாதா; மதுரை – திருக்குறள் செம்மல் ந. மணிமொழியன்; திண்டுக்கல் – மா.பெரியசாமி (எ) தமிழ்ப் பெரியசாமி; தேனி – ப. பாண்டியராசன்; விருதுநகர் – கா.ராமச்சந்திரன்; திருநெல்வேலி – பா.வேலம்மாள்; தூத்துக்குடி –கா.அல்லிக்கண்ணன், கன்னியாகுமரி – சிவ.பத்மநாபன்.

முதல்–அமைச்சர் வழங்குகிறார்

தமிழ்ச் செம்மல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.25 ஆயிரம், பாராட்டுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.

இந்த விருதாளர்களுக்கு விருதை முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 25–ந் தேதி (இன்று) தலைமை செயலகத்தில் வழங்குவார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story