தமிழக பாஜக தலைவர் தமிழிசையை தாக்க முயற்சி: பொதுக்கூட்டத்தில் இளைஞரின் செயலால் பரபரப்பு


தமிழக பாஜக தலைவர் தமிழிசையை தாக்க முயற்சி: பொதுக்கூட்டத்தில் இளைஞரின் செயலால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Jun 2018 4:31 PM GMT (Updated: 24 Jun 2018 4:31 PM GMT)

சிங்கபெருமாள் கோயிலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் தலைமையேற்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசையை, இளைஞர் ஒருவர் தாக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TamilisaiSoundararajan #BJP

சிங்கபெருமாள் கோயில்,

சென்னையின் புறநகர் பகுதியான சிங்கபெருமாள் கோயிலில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று இன்றிரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமை தாங்கினார். 

இந்நிலையில் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கையில் இளைஞர் ஒருவர் திடீரென மேடையில் ஏறி அங்கிருந்த தமிழிசையை தாக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத தமிழிசை திடுக்கிட, பாஜக தொண்டர்கள் தாக்க முயன்றவரை தடுத்து நிறுத்தி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் தாக்க முயற்சித்தவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

இதனிடையே இளைஞர் ஒருவர் தாக்க முயற்சித்தது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், ”போதிய பாதுகாப்பு இல்லாததால் மேடையேறி ஒருவர் என்னை தாக்க முயன்றார். தாக்க முயன்றவரை பாஜக தொண்டர்கள் தடுக்கவில்லையென்றால் அவர் என்னை தாக்கியிருப்பார்” எனக் கூறினார்.

Next Story