சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்


சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 17 July 2018 10:35 AM GMT (Updated: 17 July 2018 10:35 AM GMT)

சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சென்னை,

சென்னையில் அயனாவரத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில்  அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்த 50 பேரிடம் விசாரணை நடத்தி அடுத்து,  24 பேரை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இதில்  17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 12 பேரையும்  போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மகிளிர்  நீதிமன்றத்தில் 17  பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும்   ஜூலை 31 ந்தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைக்க கொண்டு செல்லும் போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் அவர்கள் மீது தக்குதல் நடத்தினர்.


Next Story