கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்


கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 21 July 2018 9:56 AM GMT (Updated: 21 July 2018 9:56 AM GMT)

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கோபிசெட்டிபாளையம் அருகே சிறப்பு மருத்துவ முகாமை பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 

மாணவர்களின் தேர்வு செயல்பாடுகள் குறித்து பெற்றோருடன் ஆசிரியர்கள் கலந்து பேச நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டுவிழா கட்டாயம் கொண்டாடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story