பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அதிகாரிகளிடம் கிரிஜா வைத்தியநாதன் பேசியதாக தகவல்


பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அதிகாரிகளிடம் கிரிஜா வைத்தியநாதன் பேசியதாக தகவல்
x
தினத்தந்தி 7 Aug 2018 11:50 AM GMT (Updated: 7 Aug 2018 11:50 AM GMT)

பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய உள்துறை அதிகாரிகளிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. #Karunanidhi

சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ள நிலையில் மருத்துவமனை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவும், சீரற்ற நிலையிலும் உள்ளது என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் காவேரி மருத்துவமனைக்கு திமுக தொண்டர்களின் வருகை அதிகரித்து வருகிறது. 

கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய உள்துறை அதிகாரிகளிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story