ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்தார்- முதல்-அமைச்சர் பழனிசாமி
ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்தார் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami
சென்னை
சென்னையில் காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளை காவல்துறை முற்றிலும் கட்டுப்படுத்தியுள்ளது. காவல் பணி மட்டுமின்றி, வெள்ளத்தின்போதும் காவலர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.“தமிழகம் அமைதி பூங்காவாக திகழ காவல்துறையினர்தான் காரணம்!”
தமிழகத்தில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது, அதனால்தான் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. காவலர் குடும்பங்களில் அமைதியான சூழல் ஏற்பட நிறைவாழ்வு பயிற்சி உதவும்.
தீய ஆதிக்கத்தில் இருந்து விலகி இருங்கள்; நண்பர்களின் அன்புத் தொல்லைக்கு இடம் கொடுத்து விடாதீர்கள்.
ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்தார் என கூறினார்.
Related Tags :
Next Story