கோவில்களில் சிலை திருட்டை தடுக்க பாதுகாப்பு குழு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்


கோவில்களில் சிலை திருட்டை தடுக்க பாதுகாப்பு குழு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 23 Sep 2018 9:30 PM GMT (Updated: 23 Sep 2018 8:26 PM GMT)

வேலூர் மாவட்டம் அரக்கேணம் அருகே பள்ளூர் கிராமத்தில் ஏரிக்கரையில் அமைந்துள்ள மகா பிரத்யங்கரா தேவி கோவிலில் 63 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

அரக்கோணம்,

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கடந்த 20 ஆண்டுகளில் எந்த சிலையும் திருட்டு போகவில்லை. அதற்கு முன்புதான் இந்து சமய அறநிலையத்துறையில் பதிவு செய்யப்படாத சில கோவில்களில் சிலைகள் திருட்டு போய் உள்ளது. அந்த சிலைகள் தற்போது மீட்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கோவில்களில் சிலை திருட்டை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் சிலை திருட்டை தடுக்க மாவட்டம் வாரியாக பாதுகாப்பு குழு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்கள் மூலம் கோவில்களில் சிலை திருட்டு தடுக்கப்படும். சிலை தடுப்பு பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேலை மாற்ற தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிலை கடத்தல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story