தர்மபுரி பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தர்மபுரியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காயமடைந்த மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை,
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
அங்குள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.
இந்த மாணவி கடந்த 5-ந்தேதி தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தார். அன்று இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள புதர்கள் அடர்ந்த
பகுதிக்கு மாணவி சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ் (வயது 20), சதீஷ் (22) ஆகிய 2 வாலிபர்கள் மாணவியை
வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அப்போது மாணவி சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து அழுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன்பின்
தடுமாறியபடி எழுந்து வீட்டிற்கு வந்த மாணவி தனக்கு நடந்த கொடுமை தொடர்பாக தாயாரிடம் கூறி கதறி அழுதார். இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீஸ்
நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து அந்த மாணவிக்கு அரூர் மற்றும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த மாணவி தர்மபுரி பகுதியில் உள்ள
ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும்
சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், தர்மபுரியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காயமடைந்த மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள
திமுக தலைவர் ஸ்டாலின்,
தர்மபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம்
அடைந்து வருவது பெரும்வேதனை! இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்! பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்
என்பது இதுதானோ? என பதிவிட்டுள்ளார்.
தர்மபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும்வேதனை!
— M.K.Stalin (@mkstalin) November 11, 2018
இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்!
பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? pic.twitter.com/WrUDHXI9Ib
Related Tags :
Next Story