கோவை வேளாண் பல்கலை கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்
கோவை வேளாண் பல்கலை கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கோவை,
கோவை வேளாண் பல்கலை கழகத்திற்கு புதிய துணைவேந்தராக டாக்டர் என். குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார். இதன்படி துணைவேந்தராக பொறுப்பேற்ற நாளில் இருந்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு அந்த பொறுப்பில் அவர் பதவி வகித்திடுவார்.
புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட இவர் தோட்டக்கலை கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர். 22 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இதுவரை 8 புத்தகங்கள் எழுதியுள்ளார். 13 பேருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
கோவை வேளாண் பல்கலை கழக துணைவேந்தர் நியமன ஆணையை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் வழங்கினார்.
Related Tags :
Next Story