ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,
விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியார்களிடம் கூறியதாவது:
பட்டாசு ஆலை திறக்கவும், பட்டாசு தொழிலை காக்கவும், தமிழக அரசு உரிய சட்ட போராட்டம் நடத்தி தீர்வு காணும். பசுமை பட்டாசு குறித்து முதல்வரை சந்தித்த பிறகு நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்படும்.
ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம்; அதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். முதல்வரை சந்திக்க பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேரம் கேட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story