அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் -அமைச்சர் ஜெயக்குமார்
அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போச்சு என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கும்போது
ஜெயலலிதா இருந்தபோதும், தற்போதும் கருத்துக்களை மாறி கூறுபவர்களுக்கு தான், நான் கூறியது பொருந்தும்.
7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் அளித்த பதில் நெருஞ்சி முள் போன்றது என்றும், இதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த பதிலை வைத்து அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். குரூப் 2 தேர்வில் பெரியார் குறித்த கேள்வி தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது.
பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார், எந்தக் கட்சி எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழக உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம், மாநில வளர்ச்சிக்காகவே மத்திய அரசுடன் இணக்கம் என கூறினார்.
Related Tags :
Next Story