ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வாலிபரை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்


ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வாலிபரை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்
x
தினத்தந்தி 13 Nov 2018 10:59 PM GMT (Updated: 13 Nov 2018 10:59 PM GMT)

ராமேசுவரத்தில் இருந்து அரியானா மாநிலம் பரிதாபாத்துக்கு நேற்று முன்தினம் சர்க்கார் சேது எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.

சென்னை,

இந்த ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நடைமேடை 5-ல் வந்தடைந்தது. பின்னர் பரிதாபாத் நோக்கி புறப்பட்ட ரெயிலில், வாலிபர் ஒருவர் ஏற முயன்றார். அப்போது அந்த வாலிபரின் கால் தடுமாறி அவர் ஓடும் ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சுமன் விரைந்து செயல்பட்டு, ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்ட வாலிபரை உடனே பிடித்து வெளியே இழுத்து மீட்டார்.

இதையடுத்து அந்த வாலிபருக்கு முதலுதவி அளிக்கப் பட்டது. இதையடுத்து அங்கிருந்த பயணிகள் விரைந்து செயல்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சுமனை பாராட்டினர்.

Next Story