ஸ்டெர்லைட் விவகாரம் : அகர்வால் குழுவின் அறிக்கையை பார்த்து அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை - கமல்ஹாசன்
ஸ்டெர்லைட் விவகாரத்தில் அகர்வால் குழுவின் அறிக்கையை பார்த்து அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கமல்ஹாசன் செய்தியார்களிடம் கூறியதாவது:
ஸ்டெர்லைட் விவகாரத்தில் அகர்வால் குழுவின் அறிக்கையை பார்த்து அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை.
எதன் அடிப்படையில் ஆய்வுக்குழு அறிக்கை அளித்தது என்று தெரியவில்லை மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து சரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிவாரண உதவிகள் கிடைக்கப்பெறாததால் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மீது கோபமாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story